ஷார்ஜா விமானத்தை கடத்த திட்டம்!
சென்னை:
சென்னையிலிருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தை சிலர் கடத்தவுள்ளதாக வந்த தகவலையடுத்து மீனம்பாக்கம் விமானநிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து ஷார்ஜாவுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படவுள்ளது. இந்நிலையில் இன்று காலை டெல்லி சர்வதேச விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்திலிருந்து சென்னை விமான நிலையபாதுகாப்புப் பிரிவுக்கு ஒரு அவசர தகவல் வந்தது.
அதில், ஷார்ஜா செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை சிலர் கடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும்இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துமாறும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்திலும், வெளியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள்வருவோர் கடுமையாக சோதனையிடப்படுகின்றனர்.
விமானத்திலும் சோதனை நடந்து வருகிறது.