For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரதராஜ பெருமாள் கோவிலில் குற்ற பத்திரிக்கையுடன் பிரேம்குமார் பூஜை!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

SP Premkumar சங்கரராமன் கொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் குற்றப் பத்திரிக்கையை வைத்து சாமி கும்பிட்டபின்னரே இந்தக் கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையை தனிப்படை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

(சங்கரராமன் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி இந்தக் கோவிலுக்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டார்.)

இந்தக் குற்றப்பத்திரிக்கையுடன் எஸ்.பி. பிரேம்குமார், கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் இன்று காலை 9.30 மணிக்குசங்கரராமன் கொலை செய்யப்பட்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு குற்றப் பத்திரிக்கையை வைத்து சாமி கும்பிட்டனர். அதன் பின்னர் காட்டுப் பங்களாவிற்கு சென்றனர். காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் காத்திருந்துவிட்டு பகல் 12.30 மணியளவில் பிரேம்குமாரும், சக்திவேலும்காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

அங்கு தனியறையில் குற்றப் பத்திரிக்கையை நீதிபதி உத்தமராஜனிடம் தாக்கல் செய்தனர்.

சங்கரராமன் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி இந்தக் கோவிலுக்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X