விபச்சார வீடு: புதுவையில் மக்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் வீட்டில் விபச்சாரம் நடத்தும் பெண்களைக் கைது செய்யக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாண்டிச்சேரி தானம்பாளையம் கிராம மக்கள் தவளக்குப்பம் காவல் நிலையத்தின் முன்பு திரண்டனர். தங்களது கிராமத்தில் ஒருவீட்டில் பெண் ஒருவர், சில பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாகவும், அதை உடனடியாகத் தடுத்து நிறுத்தி,அப்பெண்ணைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

இதுதொடர்பாக போலீஸில் பலமுறை புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள்கோஷமிட்டனர்.

தானம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், விபச்சாரம் நடக்கும் வீட்டிற்கு வந்த ஒரு "கஸ்டமர்" தனது மோட்டார்சைக்கிளை அருகில் உள்ள நடராஜன் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு "வேலையைப்" பார்க்க சென்றுள்ளார்.

இதையடுத்து அந்த நபருடன் நடராஜன் வாகனத்தை எடுக்கச் சொல்லி சப்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்தகஸ்டமர் நடராஜனை அடித்துக் காயப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்தே கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர் என்றார்.

கிராம மக்களை சமாதானப்படுத்திய போலீஸார் விபச்சாரம் நடத்திய 2 பெண்களைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+