பிரேம்குமாருடன் கருத்து வேறுபாடு: அரசு வக்கீல் நீக்கம்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் புதிய சிறப்பு அரசு வழக்கறிஞராக பாலசுந்தரம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராக ஜெயக்குமார் செயல்பட்டு வந்தார். வழக்கு தொடர்பாகஎஸ்.பி. பிரேம்குமாருக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாககுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக இருவருக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் ஜெயக்குமார் திடீரென்று மாற்றப்பட்டு அவருக்குப் பதில் பாலசுந்தரம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.பாலசுந்தரம் இதுவரை வெடிகுண்டு வழக்குகளைப் பார்த்து வந்தார். பிரேம்குமார் பரிந்துரையின்பேரில்தான் ஜெயக்குமார்மாற்றப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பிரேம்குமாரின் நடவடிக்கை சக காவல்துறை அதிகாரிகள் மட்டத்திலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள்வெளியாகின. அதேபோல அரசு வழக்கறிஞர்களுக்கும், பிரேம்குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டன.
தற்போது ஜெயக்குமார் நீக்கத்தின் மூலம் இது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications