"கூட்டணியை உடைக்க புதிய டிஜிபி"
மதுரை:
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கூட்டணிகளைப் பிரித்து, கட்சிகளை உடைக்கவே புதிய டிஜிபியை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே அதாவது உரிய காலத்திற்குமுன்பாகவே தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எப்போது தேர்தல் வந்தாலும் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலானஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும்.
எங்களது கூட்டணியில் வேறு கட்சிகள் சேரலாமே தவிர இருக்கிற கட்சிகள் எதுவும் விலக வாய்ப்பே இல்லை. 234 தொகுதிகளில் ஒன்றில்கூட அதிமுக ஜெயிக்கக் கூடாது என்பதே எங்களது கூட்டணியின் குறிக்கோள்.
அரசியல் ரீதியாக பலமிழந்து போயுள்ளதால், கூட்டணிகளை உடைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே புதிய டிஜிபியைஜெயலலிதா நியமித்துள்ளார் என்று தோன்றுகிறது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications