சுனாமி பயம் போக்க மீன் விற்ற அமைச்சர்!
சென்னை:
மீன் சாப்பிடுவதால் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்ற மக்களின் அச்சத்தைப் போக்கும் விதத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர்ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் இன்று சென்னையில் மீன் விற்பனையில் ஈடுபட்டனர்.
சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு கடல் மீன்கள் விற்பனை படுத்துவிட்டது. மீன்களில் வைரஸ் மற்றும் பாக்டீயா பாதிப்பு இருக்கலாம் என்றபீதியால் மக்கள் மீன் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மீன் விற்காமல் மீனவர்களும் வியாபாரிகளும் நொந்துபோயுள்ளனர்.
இந் நிலையில் மீன் சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில் சென்னை மாநகராட்சியில்சமீபத்தில் கவுன்சிலர்களுக்கு மீன் விருந்தளித்தார் துணை மேயர் கராத்தே தியாகராஜன்.
இதைத் தொடர்ந்து இன்று சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீன் விற்பனை செய்து மக்களின் பயத்தை போக்கும் முயற்சியில்ஈடுபட்டார். அதிமுக வட சென்னை மாவட்ட செயலாளர் சேகர் பாபு இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.
200 மீனவர்கள் புடை சூழ மீன் விற்பனையில் அமைச்சர் ஜெயக்குமார் ஈடுபட்டார். மீன் சாப்பிடுவதால் எந்தப் பாதிப்பும் வராது என்றுபொதுமக்களிடம் அவர் பிரசாரம் செய்தார்.
தண்டையார்பேட்டை வ.உ.சி. மீன் மார்க்கெட்டில் இந்த மீன் விற்பனை மற்றும் பிரசாரம் நடந்தது.












Click it and Unblock the Notifications