For Quick Alerts
For Daily Alerts
Just In
தியாகராஜ ஆராதனை விழா இன்று தொடக்கம்
தஞ்சாவூர்:
தியாகராஜ ஆராதனை விழா திருவையாறு நகரில் இன்று தொடங்குகிறது.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுவோரில் ஒருவரான தியாகராஜரின் 158வது ஆராதனை விழா இன்றுமாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. ஆளுனர் எஸ்.எஸ். பர்னாலா விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் வீர சண்முகமணி, தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன், வயலின் கலைஞர் குன்னக்குடிவைத்தியநாதன் உள்ளிட்ட பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இன்று தொடங்கும் தியாகராஜ ஆராதனை விழா பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறும். தினசரி இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.வரும் 30ம் தேதி பிரபலமான பஞ்ச ரத்தின கீர்த்தனை இசைக்கும் நிகழ்ச்சியும் இடம் பெறவுள்ளது.
Comments
Story first published: Thursday, January 27, 2005, 5:30 [IST]