புலிகள் அமைப்பில் புதிதாக 40 குழந்தைகள்: யுனிசெப்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
சுனாமி பாதிப்புகளுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பில் 40 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்புகுற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து யுனிசெப் செய்தித் தொடர்பாளர் டாயீஸ் கூறுகையில்,
சுனாமி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்களை புலிகள் தங்களது அமைப்பில் சேர்த்துள்ளனர்.மற்றவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களிலிருந்து சேர்த்துள்ளனர்.
இத்தகைய நடவடிக்கை எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த வாரத்தில் 29 சிறுவர்களைச் சேர்த்தது குறித்து புலிகளிடம் விளக்கம் கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் வரவில்லைஎன்று கூறினார்.












Click it and Unblock the Notifications