For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் ஹோட்டல்களுக்கு நாய்க்கறி விற்றவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பெங்களூரில் நாய்களைக் கொன்று அதன் கறியை விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆனந்த் என்ற இளைஞரும், மாதுரி (12) என்ற சிறுமியும் நாய்களைக் கட்டி இழுத்துச் சென்றபோது ஜெயநகர் போலீசாரிடம்சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நாய்களைக் கொன்று அவற்றின் கறியை ஹோட்டல்களுக்கு விற்று வந்ததைஇருவரும் ஒப்புக் கொண்டனர்.

ஆனந்த் ஆந்திராவைச் சேர்ந்தவர்.இவர் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து கொண்டு வீடுகளில் வளர்க்கப்படும்நாய்களையும் தெரு நாய்களையும் மாலை 6 மணிக்கு மேல் பிடித்து வந்துள்ளார்.

இந்த நாய்களைக் கொன்று அவற்றின் கறியை பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் விற்பனை செய்துள்ளார்கள். மேலும்இவர்களும் நாய்க்கறி சாப்பிட்டு வந்துள்ளனர்.

தற்போது ஆனந்த் போலீஸ் பிடியில் சிக்கியதால் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தின் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும் ஹோட்டல்களில் நாய்க்கறி வாங்கி சமையல் செய்துவிற்றவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X