கடவுள் அருளால் விடுதலை ஆவேன்: விஜயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஜயேந்திரரை வி.எச்.பி. துணைத் தலைவர் வேதாந்தம் இன்று சந்தித்துப் பேசினார்.
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ஆடிட்டர் வழக்கில் விஜயேந்திரர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந் நிலையில் விஜயேந்திரரை சென்னை மத்திய சிறையில் வேதாந்தம் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய வேதாந்தம்,சிறையில் விஜயேந்திரர் தினமும் பூஜை செய்து வருகிறார். கடவுள் அருளால் சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலையாவேன் என்று அவர் தெரிவித்தார் எனகூறினார்.












Click it and Unblock the Notifications