அப்புவும் குண்டர் சட்டத்தில் கைதாகிறான்?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள நிலையில் கூலிப் படைத்தலைவன் அப்பு, போலிக் குற்றவாளி தில் பாண்டியன் ஆகியோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
அப்ரூவராக மாறிவிட்டதால் ரவி சுப்பிரமணியம் குண்டாஸ் சட்டத்தில் இருந்து தப்பியுள்ளார்.
அப்புவையும் அப்ரூவராக்க போலீஸ் தரப்பு தீவிரமாக முயற்சித்து வந்தது. ஆனால் அப்பு வளைந்து கொடுக்கமறுத்து வருவதாகத் தெரிகிறது.
இதனால் அப்பு மீதும் குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்புவோடு சேர்த்து போலிக் குற்றவாளியான தில் பாண்டியனும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படவுள்ளான். இந்த இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான பரிந்துரையை காஞ்சிபுரம்மாவட்ட ஆட்சி தலைவர் வெங்கடேசனிடம் தனிப்படை போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீதும் குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்க காவல்துறை முடிவுசெய்துள்ளதாக காஞ்சிபுரத்தில் நேற்று இரவு திடீரென வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து சங்கர மடம் முன்ஏராளமானனோர் திரண்டனர். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுந்தரேச அய்யர், ரகு, கதிரவன் உள்ளிட்ட 10 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து அப்புவும் தில் பாண்டியனும் குண்டாஸில் உள்ளே போக இருக்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து உச்சகட்டமாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீதும் இச் சட்டத்தை தமிழக அரசுபயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications