For Daily Alerts
Just In
சங்கரராமன் கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன்
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை சென்னை நீதிமன்றத்தில் சரணடைய வைக்க ஏற்பாடுசெய்ததாக கைது செய்யப்பட்ட செந்தில்குமார், ஆறுமுகம் ஆகிய இருவருக்கும் செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன்அளித்துள்ளது.
இருவரும் தங்களை ஜாமீனில் விடக் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இவர்களது மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் அலி, இருவரும் 85 நாட்களுக்கு மேல் சிறைக் காவலில் இருந்துவிட்டதால், விதிமுறைப்படி இருவரையும் ஜாமீனில் விடுவிப்பதாக உத்தரவிட்டார்.
இருப்பினும் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழும் கைதாகியிருப்பதால் சிறையிலிருந்து வெளி வர முடியாதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, January 30, 2005, 5:30 [IST]