அருணா கொலையில் ஒருவருக்கு "குண்டாஸ்"!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஆலடி அருணா கொலை வழக்கில் கைதான ஆறுமுகம்என்பவர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனஅதிபர் எஸ்.ஏ.ராஜா ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் இக்கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஆறுமுகம் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆறுமுகம் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார்தெரிவித்தனர்.
ஆலடி அருணா கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications