பெங்களூர் விமான நிலையத்தில் தீ: ஒருவர் பலி
பெங்களூர்:
பெங்களூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், விமானங்கள் புறப்படுவதில் ஒன்றரை மணி நேர தாமதம் ஏற்பட்டது. தீவிபத்தின்போது ஏற்பட்ட புகை காரணமாக மூச்சுத் திணறி ஒருவர் பலியானார்.
பெங்களூர் விமான நிலையத்தில் உள்ள உணவகத்தின் சமையலறையில் நேற்றிரவு 2.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவுவதற்குமுன்பு உணவக ஊழியர்கள் 60 பேரில் 59 பேர் வெளியேறி விட்டனர். ஒருவர் மட்டும் புகை மூட்டத்தில் சிக்கி மயக்கமானார்
.பின்னர் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், 6 எச்.ஏ.எல். தீயணைப்பு வண்டிகள் உட்பட 7 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயைஅணைத்தன. விபத்து காரணமாக விமான நிலையம் முழுவதும் புகை பரவியிருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கே விமானப்போக்குவரத்து தொடங்கியது.
இதன் காரணமாக 6 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. அவற்றில் சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக டெல்லி செல்லும் சகாராமற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களும் அடக்கம்.
முன்னதாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று விமான நிலைய இயக்குநர் பி.பி. பகத் கூறியதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications