சுனாமி பாதித்த பகுதிகளில் 10, +2 தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பத்தாவது மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இத் தகவலை அரசு இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தது. கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் அவை விதி 110ன் கீழ் அறிக்கை ஒன்றைவாசித்தார்.
அதில், சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பல்வேறு சலுகைகளை முதல்வர்அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பத்தாவது மற்றும் 12வது வகுப்பு பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்றுஆசிரியர்களும், பெற்றோர்களும் விடுத்த கோரிக்கையை முதல்வர் ஏற்றுள்ளார்.
சுனாமியால் வீடுகள், உறவுகளோடு மாணவ, மாணவிகள் புத்தகங்கள், நோட்டுகளை இழந்துவிட்டனர். பள்ளிகளும் பல வாரங்கள்மூடப்பட்டன. இதனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களிலும் பத்தாவது மற்றும் 12வது வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்னெ.
இந்த மாவட்டங்களில் உள்ள 66 மேல் நிலைப் பள்ளிகளில் 12வது வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலும், 55 உயர் நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்திலும் தொடங்கும்.
இதுதொடர்பான கால அட்டவணைய, தேர்வுத்துறை இயக்குனரகம் தனியாக வெளியிடும்.
இதேபோல, சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம்ஆகியவற்றையும் அரசே ஏற்றுக் கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர் நிலைப் பள்ளிகள், கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கட்ட வேண்டிய கல்வி மற்றும்சிறப்புக் கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.
இதேபோல மாணவர்களின் தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இந்த கட்டணச் சலுகைகள் அடுத்த கல்வியாண்டிலும் தொடரும்என்றார் அமைச்சர் சண்முகம்












Click it and Unblock the Notifications