4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு மீன்வளத் துறை மேம்பாட்டு கழக முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜீவரத்தினம் சர்க்கரைத் துறை இணை கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் சந்த் மீனா கூட்டுறவு சங்கங்களின் கூடுதல்பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையிலுள்ள தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.டெல்லியில் வணிகத் துறை இணை செயலாளராகப் பணியாற்றி வந்த ராமசுந்தரம், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ரெசிடென்ட் கமிஷனர்பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட கலெக்டராக இருந்த ரமேஷ் சந்த் மீனா சுனாமி பாதிப்பின்போது மிக மந்தமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டதுகுறிப்பிடத்தக்கது. இதையடுத்து அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு இப்போது கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் என்ற தகரடப்பா பதவி தரப்பட்டுள்ளது.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் கமிஷ்னராக இருந்த பவன் ரெய்னா தமிழக உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்துஅந்தப் பதவி காலியானதால் ராமசுந்தரம் அப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+