சுந்தரேச அய்யருக்காக ஹேபியஸ் கார்பஸ் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சி மட முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யரை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ்கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் சுந்தரேச அய்யர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தவிர மடத்தின் கணக்குகளைதிருத்தி மோசடி செய்த வழக்கிலும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கிலும் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார்.குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் சுந்தரேச அய்யர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்டவிரோதமான செயல், அவரைவிடுதலை செய்ய வேண்டும் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் (ஆள்கொணர்வு) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications