வீரப்பன்: பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரணம் தர உத்தரவு
சென்னை:
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 30ம் தேதிக்குள் நிவாரண உதவிகளை தமிழக அரசுவழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீ திமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.எஸ்.சிவக்குமார் என்பவர் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வீரப்பனால்கொல்லப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை. அதிரடிப்படையினருக்கு மட்டும் அரசு பரிசுகளை அள்ளிக்கொடுத்துள்ளது.
அதிரடிப்படையினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா தவறு. அதற்கான செலவுத் தொகையை வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின்குடும்பங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் கற்பகவிநாயகம், ராமலிங்கம் ஆகியோர் விசாரித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,ஏற்கனவே இதே மனுதாரர் பலமுறை பொய்யான தகவல்களைக் கூறி வழக்கு போட்டுள்ளார். முரசொலி மாறன் தபால் தலை வெளியிடத்தடை கோரி முன்பு இவர் மனு செய்துள்ளார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
விளம்பர நோக்கில் மனுத் தாக்கல் செய்வது இவரது வாடிக்கையாகப் போய் விட்டது. எனவே இந்த மனுவும் டிஸ்மிஸ் செய்யப்படுகிறது.தொடர்ந்து இதுபோல செய்யாமல் இருக்கும் வகையில் மனுதாரருக்கு ரூ. 25,000 அபாரதம் விதிக்கப்படுகிறது.
இந்தத் தொகை வீரப்பனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அளிக்கப்படும். மேலும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கையின்படிபாதிக்கப்பட்டவர்களுக்கு 30ம் தேதிக்குள் நிவாரண உதவியை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையையும் தமிழக அரசையும் நீதிபதிகள் பாராட்டினர்.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications