வீரப்பன்: பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரணம் தர உத்தரவு
சென்னை:
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 30ம் தேதிக்குள் நிவாரண உதவிகளை தமிழக அரசுவழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீ திமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.எஸ்.சிவக்குமார் என்பவர் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வீரப்பனால்கொல்லப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை. அதிரடிப்படையினருக்கு மட்டும் அரசு பரிசுகளை அள்ளிக்கொடுத்துள்ளது.
அதிரடிப்படையினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா தவறு. அதற்கான செலவுத் தொகையை வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின்குடும்பங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் கற்பகவிநாயகம், ராமலிங்கம் ஆகியோர் விசாரித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,ஏற்கனவே இதே மனுதாரர் பலமுறை பொய்யான தகவல்களைக் கூறி வழக்கு போட்டுள்ளார். முரசொலி மாறன் தபால் தலை வெளியிடத்தடை கோரி முன்பு இவர் மனு செய்துள்ளார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
விளம்பர நோக்கில் மனுத் தாக்கல் செய்வது இவரது வாடிக்கையாகப் போய் விட்டது. எனவே இந்த மனுவும் டிஸ்மிஸ் செய்யப்படுகிறது.தொடர்ந்து இதுபோல செய்யாமல் இருக்கும் வகையில் மனுதாரருக்கு ரூ. 25,000 அபாரதம் விதிக்கப்படுகிறது.
இந்தத் தொகை வீரப்பனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அளிக்கப்படும். மேலும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கையின்படிபாதிக்கப்பட்டவர்களுக்கு 30ம் தேதிக்குள் நிவாரண உதவியை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையையும் தமிழக அரசையும் நீதிபதிகள் பாராட்டினர்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications