For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன்: பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரணம் தர உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 30ம் தேதிக்குள் நிவாரண உதவிகளை தமிழக அரசுவழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீ திமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.எஸ்.சிவக்குமார் என்பவர் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வீரப்பனால்கொல்லப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை. அதிரடிப்படையினருக்கு மட்டும் அரசு பரிசுகளை அள்ளிக்கொடுத்துள்ளது.

அதிரடிப்படையினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா தவறு. அதற்கான செலவுத் தொகையை வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின்குடும்பங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கற்பகவிநாயகம், ராமலிங்கம் ஆகியோர் விசாரித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,ஏற்கனவே இதே மனுதாரர் பலமுறை பொய்யான தகவல்களைக் கூறி வழக்கு போட்டுள்ளார். முரசொலி மாறன் தபால் தலை வெளியிடத்தடை கோரி முன்பு இவர் மனு செய்துள்ளார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

விளம்பர நோக்கில் மனுத் தாக்கல் செய்வது இவரது வாடிக்கையாகப் போய் விட்டது. எனவே இந்த மனுவும் டிஸ்மிஸ் செய்யப்படுகிறது.தொடர்ந்து இதுபோல செய்யாமல் இருக்கும் வகையில் மனுதாரருக்கு ரூ. 25,000 அபாரதம் விதிக்கப்படுகிறது.

இந்தத் தொகை வீரப்பனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அளிக்கப்படும். மேலும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கையின்படிபாதிக்கப்பட்டவர்களுக்கு 30ம் தேதிக்குள் நிவாரண உதவியை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையையும் தமிழக அரசையும் நீதிபதிகள் பாராட்டினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X