திட்டமிட்டபடி நுழைவுத் தேர்வுகள்: அண்ணா பல்கலை
சென்னை:
பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டாலும் பொறியியல் மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள்திட்டமிட்ட தேதியில் மாற்றமின்றி நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சுனாமி பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.இந் நிலையில் பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வுக்கான தேதிகளில் மாற்றமில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம்அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பிளஸ் டூ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் கூட திட்டமிட்ட தேதியில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூகளுக்கான பொதுநுழைவுத் தேர்வு நடைபெறும். அதில் மாற்றமில்லை.
முன்பே அறிவிக்கப்பட்டவாறு ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகளை ஒத்திப்போடசாதகமான நிலை இல்லாத காரணத்தால் தேர்வுகளை ஒத்திவைக்க இயலவில்லை.
ஏனெனில் இந்த நுழைவுத் தேர்வுக்குப் பிறகு அகில இந்திய அளவில் நடைபெறும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் தொடர்ச்சியாகவரவுள்ளன.
அதே நேரத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 66 மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவர்களுக்குநுழைவுத் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications