ஹைதராபாத் ஓபன் டென்னிஸில் சானியா
ஹைதராபாத்:
அடுத்த வாரம் தொடங்கும் ஹைதராபாத் ஓபன் டென்னிஸில் சானியா மிர்சா விளையாடுகிறார்.
சானியா கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 3வது சுற்று வரை விளையாடிய ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.இவர் வரும் திங்கட்கிழமை ஹைதராபாத்தில் தொடங்கும் டபிள்யூ.டி.ஏ. தொடரில் விளையாடுகிறார். இந்தப் போட்டித்தொடரின் பரிசுத் தொகை 1,40,000 அமெரிக்க டாலர்களாகும்.
இந்தத் தொடரில் விளையாடுவது குறித்து,
ஹைதாராபாத் தொடரில் விளையாடும்படி யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. இது எனது சொந்த மண்ணில்நடைபெறும் போட்டி என்பதால் நான் விளையாட விரும்புகிறேன்.
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு எனது இடது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும்அது எனது விளையாட்டுத் திறனைப் பாதிக்காது. இத்தகைய சவாலான சமயங்களில் எனது திறனை வெளிப்படுத்துவதில்மகிழ்ச்சியடைகிறேன்.
கிரிக்கெட் தவிர்த்து வேறு விளையாட்டுக்களும் இருப்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். இது நல்ல விஷயம்.டென்னிஸ்தான் எனது முதல் விருப்பம். இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் புகழ் அதன் மூலமே கிடைத்தது. எனவேடென்னிசுக்கே நான் முதலிடம் கொடுப்பேன்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் செரீனா வில்லியம்சுடன் தோற்றாலும், இந்த ஆண்டுக்குள் உலகின் முதல் 50வீராங்கணைகளில் ஒருவராக வர முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது.
உலகின் முதல் 100 வீராங்கணைகளில் ஒருவராக வருவதை விட முதல் 300 வீரர்களில் ஒருவராக வருவது கடினம் என்று சிலர்கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவில் பில்லியன் கருத்துக்கள் வரத்தான் செய்யும்என்றார்.
ஹைதராபாத் ஓபன் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் மார்ட்டினா நவரத்திலோவா சானியாவுடன் இணைந்து விளையாடுவார்என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நவரத்திலோவா வேறு யாருடனாவது இணையக்கூடும் என்றும்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications