விஎச்பிக்கு போலீஸ் போட்ட 23 நிபந்தனைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயேந்திரர் கைது தொடர்பாக மைலாப்பூர் மாங்கொல்லையில் மாநாடு, பொதுக் கூட்டம் நடத்த 23 நிபந்தனைகளுடன் வி.எச்.பிக்குதமிழக போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.

ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து மைலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுப்பதாகக் கூறி விசுவஇந்து பரீஷத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடரப்பட்டது.

இந் நிலையில் பொதுக் கூட்டத்திற்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளதாக வி.எச்.பி. துணைத் தலைவர் வேதாந்தம் நிருபர்களிடம்கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து பாஜக, வி.எச்.பி. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து இயக்கங்கள் இந்திய அளவிலும், தமிழக அளவிலும்அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆனால் போலீஸார் உண்ணாவிரதம் நடத்தக்கூட அனுமதி மறுத்து வருகின்றனர். இந்து மதத்தை அழிக்க சிலர் திட்டமிட்டுசெயல்படுகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூட அஞ்சுகின்றனர்.

ஜெயேந்திரர் கைதைக் கண்டிக்கும் வகையில் மைலாப்பூர் மாங்கொல்லையில் வரும் 6ம் தேதி நடைபெற இருக்கும் இந்து சமுதாயபாதுகாப்பு மாநாட்டிற்கு 23 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த மாநாட்டில் வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிஉள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+