ஆடிட்டர் வழக்கில் விஜயேந்திர் கைதில்லை
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.
இந் நிலையில் ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் விஜயேந்திரைரக் கைது செய்ய மாட்டோம் என நீதிமன்றத்திடம் தமிழக அரசுஉறுதிமொழி அளித்துள்ளது.
முன்னதாக விஜயேந்திரருக்கு ஜாமீன் வழங்க செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் இளையவர்.
அதில் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதை சுட்டிக் காட்டி, தனக்கும்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி தணிகாச்சலம் விசாரித்தார். அப்போது விஜயேந்திரருக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்புத்தெரிவித்தது.
இன்றும் இந்த மனு மீது விசாரணை நடந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications