புற்றுநோய்: மகளை கொன்று தாயும் தற்கொலை
சென்னை:
மகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டதை தாங்கிங் கொள்ள முடியாத தாய், தனது குழந்தையை மருத்துவமனையின் 6வது மாடியிலிருந்துகீழே வீசிக் கொன்றுவிட்டு தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. கணவர் மற்றும் மகளுடன் பாண்டிச்சேரியில் வசித்து வந்தார்.சமீபத்தில் சித்ராவின் கணவர் புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.
இந்த நிலையில் சித்ராவின் மகள் ஜெயஸ்ரீக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள அரசினர்குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தார் சித்ரா.
ஜெயஸ்ரீக்கு டாக்டர்கள் பரிசோதனை நடத்தியபோது அவருக்கும் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. ஜெயஸ்ரீக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக டாக்டர்கள் கூறியதால் சித்ரா அதிர்ச்சி அடைந்தார்.
புற்று நோய்க்கு சமீபத்தில் கணவரைப் பலி கொடுத்த சித்ராவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதையடுத்து அதிகாலையில் மருத்துவமனையின் 6வது மாடியிலிருந்து தனது மகளை கீழே வீசினார். பின்னர் சித்ராவும் மேலிருந்துகீழே குதித்தார். இருவரும் தலை சிதறி பரிதாபமாகப் பலியாயினர்.












Click it and Unblock the Notifications