சென்னையில் பள்ளி மாணவன் கடத்தல்: ஆள்மாறாட்டத்தால் பாதியில் விட்டு சென்றனர்
சென்னை:
சென்னையில் பட்டப் பகலில் பள்ளியின் வாசலில் இருந்து மாணவன் கடத்தப்பட்டுள்ளான். ஆள்மாறாட்டம் காரணமாக தவறானமாணவனைக் கடத்தியதால் அவனை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளது கடத்தல் கும்பல்.
கோடம்பாக்கம் சாமியார் மடம் பகுதியில் வசிக்கும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயலட்சுமியின் மகன் ராஜ்குமார் (15). இவர் கே.கே.நகரில் உள்ள பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம்போல் ஆட்டோவில் வந்து பள்ளியின் வாயிலில் இறங்கிய ராஜ்குமாரை அங்கு நின்றிருந்த மாருதி காரில்இருந்தவர்கள் நெருங்கினர். பின்னர் ராஜ்குமாரை வேனுக்குள் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினர்.
வேன் சென்று கொண்டிருந்தபோதே உன் பெயர் விஜய் தானே என்று அக் கும்பலில் ஒருவன் கேட்டுள்ளான். அதற்கு தன் பெயர் ராஜ்குமார்என அவன் அம் மாணவன் பதில் தந்துள்ளான்.
இதையடுத்து செல்போனில் யாருடனோ பேசியுள்ளது அந்தக் கும்பல். அப்போது கடத்தத் திட்டமிட்டிருந்த சிறுவனுக்குப் பதிலாகராஜ்குமாரை கடத்திவிட்டதை உணர்ந்துள்ளது அக் கும்பல்.
இதையடுத்து அண்ணா சாலை கெயிட்டி திரையரங்கு அருகே ராஜ்குமாரை இறக்கிவிட்டுவிட்டு அக் கும்பல் தப்பிவிட்டது.
இதையடுத்து அந்த மாணவன் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்குச் சென்று தான் கடத்தப்பட்டதைக் கூறியுள்ளான்.
அந்தக் கும்பல் பயணித்த வெள்ளை நிற மாருதி காரில் நம்பர் பிளேட்டே இல்லை என்றும் ராஜ்குமார் கூறியுள்ளான்.
ராஜ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே அவனை ஏதாவது கும்பல் கடத்தியதா அல்லது பரீட்சைக்குபயந்து புருடா விட்டானா என்ற ரீதியிலும் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
வழக்கறிஞரான ராஜ்குமாரின் தாயார் விஜயலட்சுமியிடமும் விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications