சுனாமி: பாலர் பள்ளிகளுக்கு வரவேற்பு
நாகப்பட்டனம்:
சுனாமி தாக்கிய நாகப்பட்டனம் மாவட்டத்தில் தமிழக அரசினால் திறக்கப்பட்டு வரும் பாலர் பள்ளிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சுனாமி பாதித்த பகுதிகளில் தமிழக அரசு பல்வேறு நிவாரண நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தற்காலிக வீடுகள், சமுதாயக் கூடங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவை தமிழக அரசினால் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் குழந்தைகளுக்காக பாலர் பள்ளிகளை (பால்வாடிகள்) தமிழக அரசு தற்போது திறந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 49 பாலர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
49 பள்ளிகளிலும் 2,500க்கும் மேற்பட்ட, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊட்டச் சத்துடன் கூடிய உணவுகள், புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
கடவுள் வழிபாடு, கல்வி, விளையாட்டு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு போதிக்கப்படுகின்றன. சுனாமியின் அதிர்ச்சியிலிருந்து மீண்டும் வரும் குழந்தைகளுக்கு இந்த பாலர் பள்ளிகள் நல்ல வடிகாலாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications