நகைக் கடை கொள்ளையில் வேல்துரை!
சென்னை:
ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான வேல்துரைக்கு சென்னையில் நடந்த நகைக் கடைகொள்ளையில் முக்கியப் பங்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து வேல்துரையை சென்னைக்குக்கொண்டு வந்து விசாரணை நடத்தவுள்ளனர்.
பிரபல கல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ.ராஜாவின் உத்தரவின் பேரில் வேல்துரை உள்ளிட்டவர்கள் ஆலடிஅருணாவைத் தீர்த்துக் கட்டியதாக போலீஸார் கூறுகிறார்கள். இந்த வழக்கில் எஸ்.ஏ.ராஜா, வேல்துரை ஆகியோர்கைது செய்யப்பட்டள்ளனர்.
இந் நிலையில் சென்னை ராயப்பேட்டை ஜேபி அவென்யூவில் உள்ள ஹரி மேன்சன் என்ற நகைக் கடையில் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் கொள்ளைச் சம்பவம் நடந்தது. கத்தி முனையில் ஒரு கும்பல் ஊழியர்களை மிரட்டி ரூ. 7லட்சம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
இக் கொள்ளை தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த ராஜு என்கிற உருண்டை ராஜு பிடிபட்டுள்ளான். அவனிடம்நடத்திய விசாரணையின்போது வேல்துரை, ஆட்டோ பாஸ்கர், நாகர்கோவில் பென்னி ( அனைவரும் ஆலடிஅருணாவைக் கொன்ற கும்பலில் இருந்தவர்கள்) ஆகியோர் கொள்ளைக் கும்பலில் இருந்ததாகதெரிவித்துள்ளான்.
இதில் பென்னியும் ஆட்டோ பாஸ்கரும் போலீஸ் காவலில் மர்மமாய் இறந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிபட்ட உருண்டை ராஜுவிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது போலீஸ் வசம் சிக்கியுள்ள வேல்துரையிடம் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரிக்க சென்னைபோலீஸார் முடிவு செய்துள்ளனர். நாளை மறுநிாள் காவல் நீட்டிப்புக்காக வேல்துரை தென்காசி நீதிமன்றம்கொண்டு வரப்படவுள்ளான்.
அப்போது அவனை போலீஸ் காவலில் எடுக்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications