ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற அப்பு!
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை கூலிப் படைத் தலைவனான அப்பு வாபஸ் பெற்றுக்கொண்டார்.
சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராகசேர்க்கப்பட்டுள்ள அப்பு மீது சில நாட்களுக்கு முன்பு குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பு, சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அப்புவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜரத்தினம், மனுவை வாபஸ் பெறுவதாகஅறிவித்தார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
இதில் ஜாமீன் கிடைத்தாலும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் இருந்து தான் ஆக வேண்டும் என்பதால் தனதுமனுவை அப்பு வாபஸ் பெற்றுவிட்டதாக அவரது தரப்பினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தில் பாண்டியன், சதீஷ், ஆறுமுகம் (3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்) ஆகியோர் தாக்கல்செய்துள்ள ஜாமீன் மனுக்கள், ஏற்கனவே தாக்கல் செய்துள்ள அருண், சில்வஸ்டர் ஸ்டாலின், தேவராஜ், சேகர் ஆகியோரது ஜாமீன்மனுக்களுடன் சேர்த்து செவ்வாய்க்கிழமை செங்கை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications