ஆலடி அருணா வழக்கில் மூவருக்கு குண்டாஸ்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
ஆலடி அருணா கொலை வழக்கில் கைதாகியுள்ள வேல்துரை உள்ளிட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் அருணா, டிசம்பர் 31ம் தேதி நெல்லை அருகே ஆலடிப்பட்டியில் படுகொலை செய்யப்பட்டார். அவரைக்கொலை செய்ய கூலிப் படையினரை ஏவியதாக பிரபல கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கியக் குற்றவாளியான வேல்துரை உள்பட மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் வேல்துரை, இந்த வழக்கில் போலியாக சரணடைந்த பாலமுருகன் மற்றும் கொலைக் கும்பலுக்கு உடந்தையாகஇருந்த அழகர் என்ற அழகர்சாமி ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications