கலவையிலும் மடத்திலும் வாஸ்து பரிகாரம்!

Subscribe to Oneindia Tamil

கலவை:

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வாஸ்து குறைகளை சரி செய்ய கண்ணாடிகள் பொருத்தப்படுவதைப் போலவே கலவை மடத்திலும்வாஸ்து குறைகளை சரி செய்ய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த வாஸ்து நிபுணர்கள், காஞ்சிபுரம் சங்கர மடம் வந்து வாஸ்து பிரச்சினையை சரி செய்யகண்ணாடிகளை வைத்துள்ளனர்.

அதேபோல கோட்டயத்த்ை சேர்ந்த 5 வாஸ்து நிபுணர்கள் கலவை வந்தனர். அங்கு வாஸ்து பிரச்சனைகளை சரி செய்வது குறித்துமடத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஜெயேந்திரரையும் சந்தித்து அவர்கள் ஆசி பெற்றனர். வாஸ்து பிரச்சனைகுறித்தும் விளக்கினர்.

புதுப்பித்தல் பணிகள் தீவிரம்: இதற்கிடையே கலவை மடத்தில் நடந்து வரும் பராமரிப்பு மற்றும் புதிய கட்டடங்கள் கட்டும்பணிகள் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளன.

ஜெயேந்திரர் தங்கியுள்ள கலவை மடத்தில் சில பகுதிகளை இடித்து விட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புதிதாககழிப்பறைகள், குளியலறைகள், சமையல் கூடம், குடிநீர் தொட்டி ஆகியவை கட்டப்பட்டுகின்றன.

மேலும், மடத்தின் சுற்றுச் சுவரும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு சில நாட்களில்முடிவடையும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, மடத்திற்குள் வருபவர்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள குறுகிய கேட் வழியாகவே அனுமதிக்கப்படுகிறார்கள்.அவர்களிடம் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+