பட்ஜெட் கூட்டத் தொடர்: சாட்டர்ஜி நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் 25ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறும் என்று நம்புவதாக மக்களவைசபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்தார்.

தனிப்பட்ட பயணமாக கொல்கத்தாவில் இருந்த சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 25 ம் தேதி தொடங்குகிறது. நிதி ஒதுக்கீடு தொடர்பான கூட்டத் தொடர் என்பதால் இக்கூட்டத்தில்கலந்து கொண்டு பேச அனைத்துக் கட்சி

இந்தக் கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவிருக்கிறேன்.ஏற்கனவே இது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களிடமும் பேசியிருக்கிறேன். எனவே பட்ஜெட் கூட்டத் தொடர் அமைதியாகநடைபெறும் என்று நம்புகிறேன்.

தகவல் தொடர்பு துறையில் 74 சதவீதம் அன்னிய முதலீடுகள் குறித்து இடதுசாரி கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். நான்இப்போது கட்சி சார்பற்றவன் என்பதால் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

சபாநாயகருடன் அவரது மனைவியும் சென்னை வந்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+