விஜயேந்திரர் விடுதலை; பாஜக பெரும் மகிழ்ச்சி
சென்னை:
விஜயேந்திரர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மாநில பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விஜயேந்திரர் விடுதலை மகிழ்ச்சி தருகிறது. ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிதொடர்ந்து வலியுறுத்துவோம். இதுதொடர்பாக போராட்டங்களையும் நடத்துவோம்.
கோவாவில் நடந்துள்ளது ஜனநாயகப் படுகொலை. இதை ஜனாதிபதி அனுமதிக்கக் கூடாது. இப் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டுநியாயம் வழங்க வேண்டும்.
சுனாமியின் பெயரால் நிதி திரட்டப்பட்டு அதை தவறான வழியில் சிலர் பயன்படுத்துகிறார்கள். அந்த நன்கொடைகளை வைத்து சிலர்மதமாற்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். எனவே மீண்டும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசு அறிவித்த சுனாமி நிவாரண நிதியில் இதுவரை ரூ. 1,000 கோடி கூட கொடுக்கவில்லை. சென்னையில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், தமிழக அரசு கேட்டதை விட கூடுதலாக கொடுக்க மத்திய அரசிடம்முயற்சிப்போம், தமிழக அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என்றார்.
ஆனால் அது நடக்கவில்லை என்றார் ராதாகிருஷ்ணன்.