சுனாமி: பிரதமரிடம் திமுக ரூ. 19 லட்சம்
டெல்லி:
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக திமுகவின் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மேலும் ரூ. 19 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
இதுவரை 2 முறை திமுக நிதி அளித்துள்ளது. முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை திமுகதலைவர் கருணாநிதி வழங்கினார்.
அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவிடம் கருணாநிதி கதை, வசனம் எழுதிய படங்கள் மூலம் கிடைத்த வருமானமான ரூ. 21 லட்சம்நிதியை, ஸ்டாலின் வழங்கினார்.
அதன் பின்னர் சன் டிவி மூலம் திரட்டப்பட்ட ரூ. 5 கோடி நிதியை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதன் நிர்வாக இயக்குனர் கலாநதி மாறன்வழங்கினார்.
இந் நிலையில் தற்போது திமுகவின் சார்பாக மேலும் ரூ. 19 லட்சம் நிதி பிரதமன் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கானகாசோலையை மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் பிரதமரை சந்தித்து வழங்கினர்.
அப்போது திமுக அமைச்சர்கள் ஏ.ராஜா, பழனிமாணிக்கம், வேங்கடபதி, எம்.பி செ.குப்புசாமி ஆகியோர் இருந்தனர்.
பல்வேறு மாவட்ட திமுகவினரும் நிவாரண நிதியை கருணாநிதியிடம் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications