நக்ஸல்கள் கைது சரி!
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் 26 நக்ஸலைட்களைக் கைது செய்தது சரியே என்று பொடா மறு ஆய்வுக் குழு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி 5 பெண்கள் உட்பட 26 நக்ஸலைட்கள் தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து பொருட்கள் மற்றும் புரட்சிகர வாசகங்கள் அடங்கிய டைரி ஆகியவைகைப்பற்றப்பட்டன.
26 பேர் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சென்னை மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதானவழக்கு விசாரணை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த 26 பேரும், தங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து பொடா மறு ஆய்வுக் குழுவிடம் புகார் மனுகொடுத்தனர். இந்தப் புகாரை விசாரித்த மறு ஆய்வுக் குழு, 26 பேர் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது சரியே என்றும்,அதற்கான அடிப்படை ஆதாரம் இருக்கிறது என்றும் கூறி தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications