அருணா கொலை: எஸ்.ஏ. ராஜா காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் அதிபர்எஸ்.ஏ.ராஜாவின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டது.
ராஜா பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சிறைக் காவல் புதன்கிழமையுடன் முடிவடைந்தது.இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரது சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் ராஜாவுடன், தென்காசி குற்றவியல் நீதிபதி அனில்குமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்புகொண்டு விசாரணை நடத்தினார். பின்னர் காவல் பிப்ரவரி 23ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications