ஜெயேந்திரர் மெளனம் கலையும்: ஜெ முகத்திரை கிழியும்!
கலவை:
ஜெயேந்திரர் விரைவில் தனது மெளன விரதத்தைக் கலைப்பார் என்றும் அப்போது முதல்வர் ஜெயலலிதாவின் முகத்திரை கிழியும்என்றும் வாரங்கல் சாது மடத்தலைவர் கிருஷ்ண சர்மா கூறினார்.
கிருஷ்ண சர்மா கலவையில் ஜெயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர்கூறியதாவது:
ஜெயேந்திரர் குற்றமற்றவர் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும். அதுவரை மெளன விரதத்தில் இருப்பது என்று ஜெயேந்திரர்முடிவு செய்திருந்தார். ஆனால், குற்றபத்திரிகை நகலைப் பெற்ற பிறகு, மக்களிடம் உண்மையை சொல்வதில் தவறு இல்லை என்றுஅவரிடம் பக்தர்கள் கூறியுள்ளனர்.
எனவே, விரைவில் ஜெயேந்திரர் தனது மெளன விரதத்தைக் கலைப்பார். அப்போது அவர் சொல்லும் பல உண்மைகள்ஜெயலலிதா உட்பட பலரின் முகத்திரையைக் கிழிக்கும். அதிலிருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது. ஆண்டவனே வந்தால் கூடஅவர்களைக் காப்பாற்ற முடியாது என்று கூறினார்.