தப்பியது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்!
ஹைதராபாத்:
தண்டவாளத்தில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், கெளதமி எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிகப்பெரும் விபத்துகளில் இருந்து தப்பின.
ஆந்திர மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் கேசமுத்திரம் ரயில்வே நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் தண்டவாளத்தில்விரிசல் இருந்தது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் இதைக் கண்டுபிடித்து, உடனடியாக கேசமுத்திரம்ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
ரயில்வே அதிகாரிகள் அந்த வழியாக வந்து கொண்டிருந்த கெளதமி எக்ஸ்பிரஸ் ஓட்டுநரை வாக்கி டாக்கி மூலம் தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில் உடனே நிறுத்தப்பட்டது. இந்த வழியாகத் தான் சென்னை-டெல்லிதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலும் செல்ல இருந்தது.
தகவல் அறிந்து உயர் அதிகாரிகள் விரைந்து வந்து தண்டவாள விரிசலை சரி செய்தனர். இதனால் சார்மினார் எக்ஸ்பிரஸ்,ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் 3 மணி நேர தாமதத்திற்குள்ளாயின.
இது நக்ஸலைட்களின் வேலையல்ல என்றும், அதிருப்தியிலிருக்கும் ரயில்வே ஊழியர்கள் யாராவது இதை செய்திருக்கலாம்என்றும் போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications