ஜெயலலிதா கஷ்டப்படுவார்: எச்.ராஜா சாபம்!
காரைக்குடி:
சங்கர மடத்திற்கு களங்கம் ஏற்படுத்திய முதல்வர் ஜெயலலிதா பல கஷ்டங்களை அனுபவிப்பார் என்று தமிழகபாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா சாபமிட்டார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சங்கரராமன் கொலை வழக்கு பிசுபிசுக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு தீர்ப்பாக வர ஆரம்பித்து விட்டது. இதனால் தமிழக அரசுக்கு பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டது.
ஜெயேந்திரரை இந்த வழக்கில் தொடர்புப்படுத்த தமிழக அரசிடம் போதிய ஆதாரம் இல்லை. இதன்காரணமாகத்தான் ஜெயேந்திரரை உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. அதை அரசால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
இந்த எரிச்சலை விஜயேந்திரரைக் கைது செய்து காட்டியுள்ளது அரசு. அவரையும் இந்த வழக்கில் தொடர்புப்படுத்தபோதிய ஆதாரம் இல்லாததால் உயர் நீதிமன்றம் விஜயேந்திரரையும் ஜாமீனில் விடுவித்து விட்டது.
இதைப் பொறுத்தக் கொள்ள முடியாத அரசு இப்போது குருமூர்த்தியைப் பிடிக்க வழக்குப் போட்டுள்ளது.இதெல்லாவற்றையும் பார்க்கும்போது சங்கர மடத்துக்கு எதிராக தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுவதாகவேதோன்றுகிறது.
கொஞ்சமாவது நாகரீகம் இருக்குமானால் ஜெயலிலதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மடத்திற்குஎதிரான வழக்குகளை வாபஸ் பெறுவதுதான் அவருக்கு மரியாதை.
ஜெயலலிதாவின் இந்து விரோத போக்குக்கு சட்டசபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
சங்கரராமன் வழக்கில் முழு தீர்ப்பு வந்தவுடன், தமிழக அரசு பல சிக்கல்களை சந்திக்கும், சங்கர மடத்திற்குகளங்கத்தை ஏற்படுத்திய ஜெயலலிதா பின்னால் அதற்காக ரொம்பவே கஷ்டப்படுவார் என்று சாபமழைபொழிந்தார் ராஜா.