போலீசுக்கு எதிராய் கிளம்பிய காஞ்சி வழக்கறிஞர்கள்
காஞ்சிபுரம்:
சங்கர மட பெண் வழக்கறிஞர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் அறிவித்துள்ளதைக்கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் 3 நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தாக சங்கர மட வழக்கறிஞர்கள் நான்கு பேர்மீது காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் புகார் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக ரேவதி, நசீமா பானு ஆகிய இரு பெண் வழக்கறிஞர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக சங்கத் தலைவர் மதனகோபால்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரை, நீதிமன்ற அனுமதியின்றியோ, போலீஸார் அனுமதியின்றியோ, சிறை நிர்வாகத்தின் அனுமதிஇன்றியோ எந்த வழக்கறிஞரும் சென்று சந்திப்பது இயலாத காரியம், நடக்க முடியாத காரியம்.
இந் நிலையில், எங்களது சங்கத்தைச் சேர்ந்த 2 பெண் வழக்கறிஞர்கள் போலீசாருக்குத் தெரியாமல் ரவி சுப்பிரமணியத்தை சிறையில்சென்று எப்படி பார்த்திருக்க முடியும்?
அந்த இருவர் மீதும் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப் போவதாக போலீஸார் கூறுவது கடும் கண்டனத்துக்குரியது. சில போலீஸ்அதிகாரிகள் திட்டமிட்டு எங்களது வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து 3 நாட்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப் போகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துவியாழக்கிழமைக்கு முன்னதாக அறிவிப்போம் என்றார் மதனகோபால்.
சங்கர மட வழக்கறிஞர்களான தியாகராஜன், சண்முகம், ரேவதி, நசீமா பானு ஆகியோர் மீது காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்றே வழக்கப்பதிவு செய்ய தனிப்படை போலீஸார் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் வழக்கறிஞர்கள் சங்கத்தின் திடீர் போராட்ட அறிவிப்பு காரணமாக அதை போலீஸார் ஒத்திவைத்து விட்டதாக கூறப்படுகிறது.
நீதிபதி கருத்து:
இதற்கிடையே தன்னை சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் சிறையிலேயே வந்து மிரட்டியதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரி ரவி சுப்பிரமணியம் தன்னிடம் தந்த மனுவின் மீது முடிவு ஏதும் எடுக்கவில்லை என்று காஞ்சி நீதிமன்றமாஜிஸ்திரேட் உத்தமராஜன் கூறியுள்ளார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications