For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரன்வேயில் டயர் துண்டுகளால் ஏற்பட்ட பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் டயர்கள் சேதமடைந்ததாக தவறான தகவல் தரப்பட்டதால் பதற்றம் நிலவியது.

அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் கிளம்பிச் சென்றது. இதையடுத்து ரன்வேயின் வழக்கமான சோதனையில்ஊழியர்கள் ஈடுபட்டபோது டயர் துண்டுகள் சிதறிக் கிடந்தன.

அவை ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானத்தின் டயர் துண்டுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால் சேதமடைந்த டயருடன்அந்த விமானம் பறந்து கொண்டிருப்பதாக மும்பை சத்ரபதி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அகமதாபாத் விமான நிலையஅதிகாரிகள் தகவல் தந்தனர்.

பைலட்டுக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் தரையிறங்கும்போது பிரச்சனை நேரலாம் என்ற பதற்றம் ஏற்பட்டது.இதனால் விமான நிலையம் எமர்ஜென்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால், 133 பயணிகளுடன் அந்த விமானம் பகல் 2.15 மணியளவில் பத்திரமாகவே தரையிறங்கியது. பின்னர் விமானத்தின் டயர்களைசோதித்தபோது அதில் சேதம் ஏதும் காணப்படவில்லை.

இதனால் அகமதாபாத்தில் முன்பு சென்ற ஏதோ விமானத்தின் டயர் தான் சேதமடைந்து சிதறியிருக்க வேண்டும் என்று தெரியவந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X