அதிமுக எம்எல்ஏ கொலையில் வட இந்திய கொள்ளையன் பிடிபட்டான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை தமிழகபோலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 9ம் தேதி வீட்டில் வைத்து கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் சுதர்சனம். அவரது வீட்டிலிருந்த பணம்,நகை ஆகியவற்றை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர். அவரது மகன், மருமகளும் தாக்கப்பட்டனர்.

இந்தக் கொலை தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது. விசாரணையில் இந்தக்கொலை-கொள்ளையை நடத்தியது வட இந்தியக் கொள்ளைக் கும்பல் தான் என்று தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் தலைமையிலான தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிர தேடுதல்வேட்டை நடத்தினர். இதில் அமர்சிங் என்பவன் பிடிபட்டான்.

52 வயதாகும் அமர்சிங் கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளான். பின்னர் அங்குள்ள பரத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திய தமிழக போலீஸார் அவனை தங்களது கஸ்டடியில் எடுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அவன் திருவள்ளூர் கொண்டு வரப்பட்டு பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.இன்று அவரை போலீஸ் காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+