திருக்குறுங்குடி கோவில் கணக்காளர் கொலை: 6 பேருக்கு முன் ஜாமீன்
மதுரை:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கோவில் கணக்காளர் முருகேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் 6 பேருக்குமதுரை உயர்நீதிமன்ற கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
திருக்குறுங்குடி மடம் மற்றும் கோவில் கணக்காளராக இருந்த முருகேசன் கடந்த ஜனவரி 20ம் தேதி காவல்கிணறு அருகேரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். முதலில் விபத்தாக இதைப் பதிவு செய்த போலீஸார் பின்னர்சந்தேகமடைந்து கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர்.
(இந்தக் கோவிலின் சிவன் சன்னதியை அகற்ற உத்தரவிட்ட ஜெயேந்திரரை எதிர்த்துக் குரல் தந்த அர்ச்சகர் மாதவன்தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாதவன் தாக்கப்பட்ட விஷயத்தில் போலீசாருக்கு பல தகவல்களைத் தந்து வந்தார் முருகேசன்.இந் நிலையில் தான் மர்மமாக இறந்து கிடந்தார்)
தண்டவாளத்தில் கிடந்த முருகேசனின் உடலுக்கு அருகே கிடந்த ஒரு காகிதத்தில், மடக் கணக்குகளை திருத்த வேண்டும்.இல்லாவிட்டால் சங்கரராமனுக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து சிலருடைய மிரட்டல் காரணமாகவே முருகேசன் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று போலீஸார்முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து திருக்குறுங்குடி மட மேலாளர் திருநாராயணன், நம்பிப் பாண்டியன், திருநாமம் என்ற ராதா, நம்பித் தலைவன் என்றசிம்சன் பாண்டியன், ஆர்.சேஷாத்ரி, செல்வம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
தாங்கள் கைதாகக் கூடும் என்பதால் முன் ஜாமீன் கோரி இந்த 6 பேரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல்செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கண்ணதாசன், 6 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கினார். மேலும், காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸார் முன்பு, அவர்களாகவே விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
6 பேரில் நான்கு பேரை விசாரணைக்கு வருமாறு தனிப்படை போலீஸார் ஏற்கனவே அழைத்திருந்தும் அவர்கள் வராமல் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications