சுனாமி பாதித்த பகுதிகளில் சோலார் விளக்குகள்!
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகளில் சூரிய சக்தியால் இயங்கும் விளக்குகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நிவரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்காலிக வீடுகளில்அவர்கள் குடி வைக்கப்பட்டுள்ளனர். இந்த வீடுகளில் விளக்கு வசதி இல்லை.
இதையடுத்து மீனவர் குடியிருப்புகளில் சூரிய ஒளியால் இயங்கும் விளக்குகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தலா ரூ. 3,500விலையுள்ள இந்த விளக்குகள், தமிழக அரசின் எரிசக்தி வளர்ச்சி முகமை மூலமாக மீனவர்களுக்கு வினியோகிக்கப்படும்.
முதலில் 4,000 விளக்குகள் வாங்கப்படவுள்ளன. இந்த விளக்குகள் முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்வினியோகிக்கப்படும். குமரி மாவட்டத்தில் 500 விளக்குகளும், நெல்லை, தூத்துக்குடியில் தலா 250 விளக்குகளும் வழங்கப்படும்.
இதைத் தொடர்ந்து நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வினியோகிக்க மேலும் 3,000 விளக்குகள் வாங்கப்படும் எனதமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications