For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 இந்திய பொறியாளர்களுக்கு அமெரிக்கா கெளவரம்

By Staff
Google Oneindia Tamil News

ஹூஸ்டன்:

அமெரிக்காவில் சிறந்த பொறியாளர்களுக்குத் தரப்படும் மிகப் பெரிய கெளரவம் 5 இந்தியர்களுக்கு தரப்பட்டுள்ளது.

அந் நாட்டின் பிரபலமான தேசிய பொறியியல் அகாடெமி உறுப்பினர்களாக இந்த 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அகாடெமியிக்கு74 புதிய கெளரவ உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

இதில் ராஜா வி.ரமணி, சுபாஷ் மகாஜன், அருனவ மஜூம்தார், சுபாஷ் சிங்கல், சங்கர் நாயர் ஆகியோர் இந்தியர்கள்.

பொறியியல் துறையின் மிகச் சிறந்த சாதனையாளர்களுக்கு அமெரிக்கா வழங்கும் உயர்ந்த கெளரவம் இதுவாகும்.

இதில் சுபாஷ் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பணியாற்றுகிறார். செமிகண்டக்டர்கள், மின் காந்தப்பொருட்கள், லைட்-வேவ் கம்யூனிகேசன்ஸ் ஆகியவற்றில் இவர் புரிந்த சாதனைகளுக்காக இந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.

அருனவ மஜூம்தார், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பேராசிரியராக உள்ளார். நானோஸ்கேல்தெர்மல் என்ஜினியரிங் ஆராய்ச்சிகளுக்காக இவர் தேசிய பொறியியல் அகாடெமி உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X