நாங்க ரெடி.. நீங்க ரெடியா?- ஜி.கே.வாசன்!!
சென்னை:
சட்டசபைத் தேர்தலை சந்திக்க தமிழக காங்கிரஸ் கட்சியும் தயாராக உள்ளதாக அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தேர்தலுக்குத் தயாராகுமாறு அதிமுகவினரை முதல்வர் ஜெயலலிதா தயார்படுத்தி வருகிறார். விரைவில் சட்டமன்றத்துக்கு தேர்தல் வரலாம்என திமுக, பா.ம.க ஆகியவையும் நம்புகின்றன.
இந் நிலையில் சோனியா காந்தியின் 58வது பிறந்த நாள், காங்கிரஸ் கட்சியின் 120வது ஆண்டு விழா மற்றும் ஜி.கே.வாசனின் பிறந்த நாள்ஆகிய மூன்றையும் சேர்த்து முப்பெரும் விழாவாக இன்று தமிழக காங்கிரஸ் கட்சி கொண்டாடுகிறது.
இன்று காலை இந்த விழா காமராஜர் அரங்கத்தில் நடந்தது. விழாவை தொடங்கி வைத்து ஜி.கே.வாசன் பேசுகையில், சட்டசபைத் தேர்தல்எப்போது வந்தாலும், எந்த நேரத்தில், எந்தச் சூழ்நிலையில் வந்தாலும் அதைச் சந்திக்க தமிழக காங்கிரஸ் தயாராகவே உள்ளது. இதற்காகதொண்டர்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி சட்டசபைத் தேர்தலிலும் தொடரும். முன்பிருந்ததை விட கூடுதல் கட்சிகள் சேர்ந்தால் அதுகூட்டணிக்கு பலம்தான் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications