வீரப்பன்: வனப் பகுதி இளைஞர்களுக்கு போலீஸ் வேலை
ஈரோடு:
வீரப்பன் நடமாட்டம் இருந்த காட்டுப் பகுதியைச் சேர்ந்த மலை வாழ் இளைஞர்களுக்கு போலீஸ் பணியில்சேருவதற்கான பயிற்சியை தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் கொடுத்து வருகிறார்கள்.
இதற்காக காட்டுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த 39 இளைஞர்களை அதிரடிப்படையினர் தேர்வு செய்துள்ளனர்.அவர்களுக்கு மரம் ஏறுதல், கயிறு ஏறுதல், கட்டடங்கள் மீது ஏறுதல், ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்டபல்வேறு பயிற்சிகளை கொடுத்து வருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் இந்த பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இந்தப் பயிற்சிக்குப் பின் வரும் 21ம் தேதி 39 பேரும்காவலர் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள்.
இவர்களுக்கு விரைவில் கமாண்டோ பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து டிஐஜி சண்முகவேல் கூறுகையில், மலை வாழ் இளைஞர்களுக்கு காட்டுப் பகுதிகள் அனைத்தும்அத்துபடியாக உள்ளது. எனவே இவர்களில் தகுதியுடையவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு முறையானபயிற்சி கொடுத்து காவலர் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தீவிரவாதிகளையும், காட்டுக் கொள்ளையர்களையும் சமாளிக்கும் பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்படும்என்றார்.