சுனாமியால் சேதமடைந்த எம்ஜிஆர் சமாதி: சீரமைக்க கோரிக்கை
சென்னை:
சுனாமி அலையால் சேதமடைந்த எம்.ஜி.ஆர். சமாதியை சீரமைக்குமாறு மனித நேய மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இம் மன்றத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை மனித நேய நாளாக அறிவிக்கவேண்டும், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளை உரிய முறையில் பாதுகாத்து, தினமும் மாலைகள் அணிவிக்கப்பட வேண்டும்,நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும்,
சுனாமி அலையால் மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா சமாதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சமாதிகளைச் சுற்றிலும் வலுவான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், கவிஞர் வாலி, நடிகர்கள் ராஜேஷ், பாண்டியராஜன், கவிஞர்கண்ணதாசனின் மகள் கவிஞர் விசாலி மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.