ஜெ. சொத்து குவிப்பு: அரசு வக்கீல் நியமனம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சாரியாநியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது. இதையடுத்து பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதன் நீதிபதியாக 6மாதங்களுக்கு முன் பச்சாப்புரே நியமிக்கப்பட்டார்.

வழக்கு தொடர்பான ஆவணங்கள், சென்னையில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டு, மொழி பெயர்க்கும் பணிநடந்தது. மொழி பெயர்ப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஈடுபட்டனர்.

இந் நிலையில், மொழி பெயர்ப்பு பணி முழுமையாக முடிவடைந்து விட்டதாக கர்நாடகா உயர் நீதிமன்றம், மாநில அரசுக்குதகவல் தெரிவித்தது.

இதையடுத்து இந்த வழக்கிற்கான அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவை நியமித்து, கர்நாடக அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+