போலி ஓட்டுனர் லைசென்ஸ்கள்: சென்னையில் வாகன சோதனை தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் போலி ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை தயாரித்து, விற்பனை செய்து வந்த 6 பேர் கொண்ட கும்பலைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் கும்பல் இதுவரை 40,000 போலி லைசென்சுகளை வினியோகித்துள்ளதால், சென்னை நகரில் அனைத்து இரண்டு சக்கரவாகன ஓட்டிகளின் லைசென்சுகளையும் சரிபார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் போலி ஓட்டுனர் லைசென்சுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இதைத்தயாரித்து விற்கும் கும்பலைப் பிடிக்க ரகசிய விசாரணை நடந்து வந்தது.

விசாரணையில் சைதை சேகர் என்பவர் போலீஸாரிடம் சிக்கினார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி ஆர்.டி.ஓ.அலுவலகத்தையே இவர் நடத்தி வந்தது தெரியவந்தது.

சேகர் தவிர தாந்தோணி, சேதுராமன், சங்கர், நீலமேகம் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து போலி ஓட்டுநர் உரிமங்களைத் தயாத்துவிற்பனை செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஓட்டுனர் உரிமத்தில் உள்ள ஹாலோகிராம் முத்திரையை போலியாக தயாரிக்க உதவும்எந்திரத்தை டெல்லியில் ரூ. 1 லட்சம் செலவிட்டு வாங்கி வந்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி இதுவரை 40,000 போலி ஒட்டுனர் உரிமங்களை இந்தக் கும்பல் தயாரித்து, ஒரு உரிமம் ரூ. 800 என்றவிலைக்கு விற்றுள்ளது.

இக் கும்பலிடமிருந்து ரூ. 8.5 கோடி மதிப்புள்ள 60,000 ஹாலோகிராம் முத்திரைகள், போலி அரசு சீல்கள், கம்ப்யூட்டர்கள்,கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பல் இதுவரை ரூ. 1.5 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது.

இவர்கள் மூலம் வினியோகிக்கப்பட்டுள்ள போலி ஓட்டுனர் உரிமங்களைப் பறிமுதல் செய்வதற்காக நகர் முழுவதும் இரு சக்கரவாகனங்களின் ஓட்டுனர் உரிமங்களை சோதனையிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் நடராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+