For Daily Alerts
Just In
காவல் நிலையத்தில் ஆஜராகி விஜயேந்திரர் கை நாட்டு
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் உள்ள விஜயேந்திரர் உயர் நீதிமன்ற நிபந்தனைப்படி இன்று காவல் நிலையத்தில் கைநாட்டு (விரல் ரேகைப் பதிவு) வைத்தார்.
விஜயேந்திரர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான பங்களாவில் தங்கியுள்ளார்.நிபந்தனைப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி இன்ஸ்பெக்டர்முன்னிலையில் கையெழுத்திட வேண்டும்.
கடந்த வாரம் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி கை நாட்டு வைத்தார் (சங்கராச்சாரியார்கள் கையெழுத்து போடுவதில்லை. கைநாட்டு வைப்பதே மரபாக உள்ளது)
இந் நிலையில் இன்று காலை 10.40 மணிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விரல் ரேகையை பதித்தார்.
Comments
Story first published: Sunday, February 20, 2005, 5:30 [IST]