மும்தாஜை விசாரிக்க மும்பை போலீஸ் வருகை?
சென்னை:
நக்மா பெயர் குழப்ப விவகாரம் தொடர்பாக நடிகை மும்தாஜிடம் விசாரணை நடத்த மும்பை போலீஸார் சென்னை வரவுள்ளதாகத்தெரிகிறது.
மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுக்கும், நடிகை நக்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இப்ராகிமின்கூட்டாளியாக இருந்த ராஜேஷ் ஜம்போ என்பவன் மும்பை போலீஸில் வாக்குமூலம் கொடுத்தான்.
இதைத் தொடர்ந்து ராஜேஷ் குறிப்பிடும் நக்மா நான் அல்ல, அது தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ். மும்தாஜின்இயற்பெயர் நக்மா கான். அவரது தாயார் தபசும்கான் கடந்த 2000மாவது ஆண்டில் மும்பை தாதாக்களுடன் இருந்த தொடர்பு காரணமாககைது செய்யப்பட்டவர். இப்போது லண்டனில் வசித்து வருகிறார் என்று நடிகை நக்மா விளக்கம் அளித்தார்.
நக்மாவின் மறுப்பு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நக்மாவின் புகார்களை மும்தாஜ் மறுத்துள்ளார். எனது பெயர் நக்மா என்பதுஉண்மைதான். ஆனால் ராஜேஷ் கூறியுள்ள காலகட்டத்தைப் பார்த்தால் அப்போது நான் பள்ளியில் படித்து வந்தேன்.
எனது தாயாரின் பெயர் தபசும்கான் என்று கூறியுள்ளார் நக்மா. ஆனால் அது உண்மையல்ல. அவரது உண்மையான பெயர் ரூபைனா கான்.அவர் இப்போது லண்டனில்தான் வசித்து வருகிறார். அவரை போலீஸார் கைது செய்யவில்லை என்று மும்தாஜ் கூறியுள்ளார்.
நக்மாவும், மும்தாஜும் மாறி மாறி மறுத்து வருவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அனீஸுடன் தொடர்பு வைத்திருந்த நக்மா யார் என்பதை அறிய மும்பை போலீஸார் சென்னைக்கு வந்து மும்தாஜை விசாரிக்க முடிவுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications